பள்ளிக்கூட
மணி
டாண் டாண், டாண் டாண்
மணி அடிக்குது.
நம்மையெல்லாம் வருகவருக
என்ற ழைக்குது.
சிறுவரோடு சிறுமியரைச்
சேரத்த ழைக்குது.
அவரவர்கள் இடத்தில்வந்தே
அமரச் சொல்லுது.
ஆசிரியர் வந்ததுமே
நிற்கச் சொல்லுது.
அக்கறையாய்ப் பாடமெல்லாம்
கற்கச் சொல்லுது.
படித்தபடி வாழ்க்கையிலே
நடக்கச் சொல்லுது.
பலரும்போற்ற நல்லபெயர்
எடுக்கச் சொல்லுது !
|