பக்கம் எண் :

                                        குற்றாலத்துக் குரங்கு


                 
குற்றா லத்து மலையிலே
                     குரங்கு ஒன்று இருந்ததாம்.
                     குரங்கு ஒன்று இருந்ததாம்.
                     குட்டி யோடு வாழ்ந்ததாம்.

                 
அம்மாக் குரங்கும் குட்டியும்
                     அருவி நீரில் குளிக்குமாம்.
                     அருவி நீரில் குளிக்குமாம்.
                     ஆனந் தமாய்க் குதிக்குமாம்.

                
 குளித்த பிறகு இரண்டுமே
                     குடுகு டென்றே ஓடுமாம்.
                     குடுகு டென்றே ஓடுமாம்.
                     கோயில் வாசல் சேருமாம்.

                
குட்டிக் குரங்கும் தாயுமே
                    கோயி லுக்குள் செல்லுமாம்,
                    கோயி லுக்குள் செல்லுமாம்.
                    குனிந்து வணக்கம் செய்யுமாம்.
                                                                    

 
73