பக்கம் எண் :

               பழங்கள் தேங்காய்த் தட்டுடன்
                 
பக்தர் அங்கே வருவராம்
                  பக்தர் அங்கே வருவராம்.
                  பார்த்துக் கொண்டே யிருக்குமாம்.


               தட்டி லுள்ள பொருள்களைத்
                 
தட்டிப் பறிப்ப தில்லையாம்.
                  தட்டிப் பறிப்ப தில்லையாம்.
                  தடங்கல் செய்வ தில்லையாம்.


               அர்ச்ச னைகள் நடப்பதை
                 
அம்மாக் குரங்கு காட்டுமாம்.
                  அம்மாக் குரங்கு காட்டுமாம்.
                  அதனைக் குட்டி பார்க்குமாம்.


               குங்கு மத்தைத் தாயுமே
                 
குனிந்து பணிந்து வாங்குமாம்.
                  குனிந்து பணிந்து வாங்குமாம்.
                  குட்டி தன்னை நெருங்குமாம்.


              குட்டிக் குரங்கின் நெற்றியில்
                 
பொட்டு வைத்து மகிழுமாம்.
                  பொட்டு வைத்து மகிழுமாம்.
                  கட்டி முத்தம் கொடுக்குமாம்.


              பக்தர் இரண்டு குரங்கையும்
                 
பார்த்துப் பார்த்து மகிழ்வராம்.
                  பார்த்துப் பார்த்து மகிழ்வராம்.
                  பழங்கள் தேங்காய் தருவராம்.

 
74