கொய்யாப் பூவே, கொய்யாப் பூவே,
தரையில் கிடப்பதேன்?
ஃ
ஃ
ஃ
பூவே, நீயே காய்ஆவாய்.
காயி லிருந்து கனிஆவாய்.
கனியை உடனே பறித்திடலாம்
கடித்துக் கடித்துச் சுவைத்திடலாம்
என்றே நானும் சிலநாளாய்
எண்ணி யிருந்தேன். ஆனால்என்
எண்ணத் தினிலே மண்விழவா
இப்படி மண்ணில் நீ விழுந்தாய் ?
|