பக்கம் எண் :

      கொய்யாப் பூவே, கொய்யாப் பூவே,
      தரையில் கிடப்பதேன்?

        
  ஃ               ஃ             ஃ

        
பூவே, நீயே காய்ஆவாய்.
         காயி லிருந்து கனிஆவாய்.


         கனியை உடனே பறித்திடலாம்
         கடித்துக் கடித்துச் சுவைத்திடலாம்

         என்றே நானும் சிலநாளாய்
         எண்ணி யிருந்தேன். ஆனால்என்

         எண்ணத் தினிலே மண்விழவா
         இப்படி மண்ணில் நீ விழுந்தாய் ?

 

 
98