|
பொங்கி
வழிந்திடுந்தேன் - அது
பூக்களின் வேர்வையடி!
வெங்கனல் கோடையடி - இது
வேனில் பருவமடி!
பொரிபொரி யாய்மலரைப் - பசும்
புன்னை மரத்தினில் பார்,
கரிகரி யாய்நிழலை -அதன்
காலடி சுற்றிலும்பார்;
வரிவரி யாயலையை - முழு
வட்டக் குளத்தினில்பார்
சரிசரிஎன்பவளே - சுவை
தரவரு வாய்மயிலே!
ஊட்டி வளர்ப்பவளே - உயிர்
ஓவியம் போன்றவளே!
ஏட்டின் கவிதையைப்போல் - நகர்
எங்கும் புதுமையடி!
காட்டுப் பறவையெலாம் - தமிழ்க்
காதல் புரியுதடி!
வாட்டம் தவிர்த்திடடி - எனை
வந்து தழுவிடடி!
|