பக்கம் எண் :

சுரதாவின் தேன்மழை25

நல்லவர்தம் நட்பெனவே வளரும்-சில
      நாளிலதன் ஈரவுடல் தளரும் -இன்பச்
சொல்லமுதப் பாவலரைத்
      தூண்டிவிட்டுக் கொண்டிருக்கும்
             சோதி -வான்
             ஊதி!

மொட்டுமுல்லைக் கட்டவிழ்ந்தாற் போலே-வெள்ளி
      முத்திரைமி தக்குதுபார் மேலே!-மதி
வெட்டவெளி மீதினிலே
      வெற்றிமன்னன் வெண்குடைபோல்
             விரியும்-நகை
             புரியும்!

வட்டமிட்ட வெண்ணிலவின் மீது-காயம்
      வந்தமையைக் காரணந்தான் யாது?-வண்ணக்
கட்டழகி அஞ்சனத்தை
      விட்டெறிந்த தால்விளைந்த
            கறையோ? -சொந்தக்
            குறையோ
பூம்புகார்
கல்லினால் எல்லை காட்டிக்
      காதலால் இதயங் காட்டி
வில்லினால் வீரங் காட்டி
      வென்றபின் ஈரங் காட்டி
சொல்லினால் நீதி காட்டிச்
      சோழர்கள் ஆண்டு வந்த
தொல்புகார் நகரம்,
      கீர்த்தி தூங்காத நகர மாகும்!