|
மங்கல மனைகள்;
ஆடல்
வளர்கலைக் கூடம் நல்ல
சங்கநூற் புலமை மிக்கோர்
சந்திக்கும் `வார்த்தை வீடு`;
தங்குதற் காகச் செய்த
தனிமனை பலவற் றோடு,
பொங்குசெந் தமிழி ருந்து
புறங்காத்த நகர மாகும்!
"துகிர்துகிர்" என்னும் ஓசை
துகிர்விலை யோசை; பூவை
"முகர்முகர்" என்னும் ஓசை;
மொய்த்தவர் ஓசை; "நல்ல
நகர்நகர்" என்றும், "சற்றே
நகர்நகர்" என்றும், நீபோய் "பகர்பகர்"என்றும்,
ஓசை
பரந்தபொன் னகர மாகும்!
சீரோடு நீண்டு சென்ற
தெருக்களில் தருக்கள்; கோவில்
தேரொடும் வசந்த வீதி;
தென்புறம் சமணர் பள்ளி;
ஊரோடும், மழைநீ ரோடும்
ஒற்றுமை கொண்ட பொன்னி
நீரோடு நேசங் கொண்ட
நெய்தல்நீர் நகர மாகும்!
பிறைமுக வடிவங் காட்டும்
பெருங்கடல் விரித்த நீரில்,
அறிமுகம் கொண்ட கப்பல்
ஆனைபோல் அசைந்தே நின்ற
|