பக்கம் எண் :

சுரதாவின் தேன்மழை28

சொல்செயும் புலவ ரெல்லாம்
      துன்பத்துள் தூங்கு கின்றார்;
நல்லவர் எல்லாம் நாட்டில்
       நலிகின்றார்; ஆனால் இங்கே
அல்லவர் பெருகி வீண்வாய்
       அளக்கின்றார் அதனால் தானோ
பல்லியே நின்சொல் லுக்குப்
       பலனுண்டென் கின்றார் போலும்!

உனக்கொரு செய்தி சொல்வேன்;
       உற்றுக்கேள்; பல்லி யேநீ
தனிக்குரல் பெற்றாய்; யானோ
       தமிழ்க்குரல் பெற்றேன்; நீயோ
கனைக்கிறாய்; அதனா லன்றோ
       `கனைகுரற் பல்லி` என்று
பனித்தமிழ் சக்தி முற்றப்
       பாவலன் பாடி வைத்தான்,

கருங்கடல் ஓய்வே இன்றிக்
       கனைத்தல்போல் கனைத்தா யேனும்,
பெருங்கடல் ஓசை கேட்டே
       பெரும்புவி அச்சங் கொள்ளும்.
இருப்பினும் ஈக்கள் உன்றன்
       ஈரவாய் ஓசைக் கஞ்சும்;
வரிப்புலி நீயே என்றால்,
       ஈக்களே உனக்கு மான்கள்!

தலையில்நீ வந்து வீழ்ந்தால்
      சண்டையாம்! தோளில் வீழ்ந்தால்
நலம்பல பெருகு மென்பர்!
      நானிதை நம்பவில்லை,