|
மதமென்ன,
புத்தமுத மோ? கௌ மார
மதம், சமணம் இருளறுக்கு மோ? எல் லாம்வாய்
மதமன்றி வேறென்ன? உயிரெ ழுத்து
வந்தால்குற் றியலுகரம் மெய்விட் டோடும்,
மதமெல்லாம் பகுத்தறிவு வளர்ந்தால் ஓடும்!
மதிபொங்கப் பொங்கவெளி மதங்கள் மங்கும்!
"இரட்டையர்நாம்; இணையெதுகை இனிநாம்; நீயோர்
ஈரவயல்; நானோர்ஏர் உழவன்; கட்டில்
எரித்திரத்தின் சாசனமே! அன்-அம் என்னும்
சாரியையே! தொடுபதமென் றழைக்கும் சோறே!
பருப்பளவு குற்றத்தை இந்த நாடு
பனையவளாய்ப் பேசுமென்ப தறிவேன், இந்தக்
குருட்டுலகம். குறும்புலகம் இனிமேல் என்னைக்
குறைகூறும்; கூறட்டும் கவலை யில்லை,
"எப்போதும் இனிப்பவளே! ' ழ' கரம் என்னும்
எழுத்தேபோற் சிறந்தவளே! பொதுச்சீர் மாதே!
உப்பே! பெண்ஓவியமே! தலைமை தாங்கும்
உவமையனி போன்றவளே! எனக்கு வாய்த்த
முப்பாலே! கரிக்காதே கடலே! செம்பொன்
முத்திரையே! முழுமதியே! என்றன் வாய்க்குத்
தப்பாத மூவசைச்சீர் கனியே ! சேற்றுத்
தாமரையே! கூந்தல்கொண்ட பிறையே! கேளாய்,"
"தென் கடலில் முத்திருக்கும்; செல்வ மேநீ
திறக்கும்வாய் வாசலிலே முத்தி ருக்கும்;
தென்மலையில் மணக்கும்சந் தனமி ருக்கும்;
சிற்றின்பத் தனமுன்ற னிடமி ருக்கும்!
தென்திசையில் குளித்தென்றல் படுத்தி ருக்கும்;
செவ்வல்லி நின்உதட்டில் படுத்தி ருக்கும்!
|