|
கண்பாவை இழந்த
கள்வன்
காய்ச்சீரால் நடந்து சென்ற
வெண்பாவை பூர்த்தி செய்து
வெற்றியைத் தேடித் தந்தான்;
பெண்பாவை விளக்கைத் தூண்டப்
பிடிப்பட்டான் பாட்டுப் பித்தன்!
சாயலைக் காட்டும் காம
சமுத்திரப் பரத்தை, ஆங்கோர்
ஆயிரம் கேள்வி கேட்டாள்;
அதற்கவன் விடைகள் தந்தான்.
"தாயினும் சிறந்த தான
தமிழ்கற்றும், சிலையில் லாத
கோயில்போல் ஆனேன்" என்று
கூறினான்; இரக்கங் கொண்டாள்!
"நிதியில்லை; எனக்கோர் காணி
நிலமில்லை; வீடு வாசல்
எதுவும்நான் பெற்றே னில்லை
என்பது வறுமை அன்று!
மதிநுட்பம் இலாமை ஒன்றே
மாந்தர்க்கு வறுமை யாகும்;
இதைநன்கு புரிந்து கொண்டால்
இல்லையென் றேங்க மாட்டார்;"
"இருப்பினும், `பொருளும் பொன்னும்
இல்லாரைப் பார்த்துப் பார்த்துச்
சிரித்திடும் உலகம்` என்னும்
செய்தியும் அறிவேன்" என்றாள்."
நெருக்கடி தீர்த்துவைத்தால்
நிச்சயம் வாழ்வேன்" என்றான்;
|