பக்கம் எண் :

சுரதாவின் தேன்மழை61

"அரித்திடும் வறுமை தீர்ப்பேன்
      அஞ்சாதீர்" என்றாள் வஞ்சி!

மையணி மடந்தை சொன்ன
      வார்த்தையைத் தேவன் கேட்டுத்
தையெனக் குளிர்ந்தான்; பின்னர்
      தமிழ்பற்றிப பேச லானார்.
ஐயென விரைந்து தோன்றும்
      அழகுவெண் ணிலாவைப் போன்றாள்
நெய்யமு தளித்தாள். உண்டான்,
       நேரிழை அவனை நோக்கி...

"முப்பாலைத் தந்தான், பூத்து
       மூத்தவ னான தேவன்.
அப்பாலோர் தேவன் வந்தான்,
       அன்னவன் `மணநூல்` தந்தான்;
இப்போது நீரோர் தேவர்
       என்பதால் எதிர்பார்க் கின்றேன்."

"நாராய ணாவென் பார்க்கும்
       நமசிவா யாவென் பார்க்கும்
தீராத வினையைத் தீர்க்கும்
       தேவனே எனச்சொல் வார்க்கும்.
ஊராரும், எங்கள் வீட்டில்
       உள்ளாரும் அடிமை! செய்யுள்
ஆராயும் பாவா ணர்க்கே
       அடிமைநான்" என்றாள்! ஈந்தாள்!