விருந்துநூல்;
மேல்கீழ் என்னும்
வேற்றுமை நோயைத் தீர்க்கும்
மருந்துநூல்; அறிவில் மூத்தோன்
வடித்தநூ லான முப்பால்,
திருக்குறள் கல்லா தானைத்
திருமணம் செய்து கொள்ளேன்!
உண்ணாதான்; அறஞ்செய் யாதான்;
ஓங்கிய கீர்த்தி சேர்க்க
எண்ணாதான்; நேர்மை நோக்கம்
இல்லாதான்; பிறந்த நாட்டைக்
கண்ணேபோற் சிறந்த தாகக்
கருதாதான்; ஈக்கள் மொய்த்த
புண்ணேபோல் இழிந்தோன்; அந்தப்
புல்லணை மணக்க மாட்டேன்! |
பஞ்சம்
|
மாங்காய்ப்பால் உண்டு; வேறு
மரங்களின் பாலு முண்டு;
தேங்காய்ப்பால் வீட்டி லுண்டு;
செயற்கைப்பால் கிடைப்ப துண்டு!
ஆங்காங்கே பசும்பால் விற்கும்;
ஆயினும் விலைகொ டுத்து
வாங்காப்பால் என்னும் தாய்ப்பால்
மட்டுமே நாட்டில் பஞ்சம்!
மஞ்சளும் உண்டு; முல்லை
மலர்களும் எங்கு முண்டு;
வஞ்சியர் முகத்தில் இன்றோ
மஞ்சளின் பூச்சைக் காணோம்!
|
|
|
|