பக்கம் எண் :

சுரதாவின் தேன்மழை89

வெற்றி பெற்ற வில்லுக்கு வருமோ?
எடுத்துக் கடிக்கும் இடமெல்லாம் இனிக்கும்
கரும்பே! தேனே! காமத்துப் பாலே!
கனலும் புனலும் காற்றும் புகையும்
கலந்த கலப்பே கருநிற மேகம்!
பனியும் பழுத்தசெங் கனியும் பற்பல
மதுமலர்த் தொகையும் மங்கைநின் தேகம்!
எனக்குநீ வந்து வாய்த்ததென் யோகம்!
நிலத்திற் கழகு நெல்லாம், கரும்பாம்;
தடாகத்திற் கழகு தாமரைப் பூவாம்;
நெஞ்சத்திற் கழகு நல்ல நினைவுகள்;
மஞ்சத்திற் கழகு மாதே நீதான்!
உலவும் தென்றல் உடல்வெப்பம் தீர்க்கும்;
தெளிந்தசொல் ஏறிய திருவா சகமோ
தப்பாது நெஞ்சின் வெப்பத்தைப் போக்கும்;
இன்பமே! உன்கை உன்மீது பட்டால்,
பட்ட இடமோ பனிச்சுனை யாகும்!

தங்கப் பதுமையே! தமிழுக் கிருவராம்!
இன்பம் காணவும் இரண்டுபேர் வேண்டும்!

தெளிவா யிப்போது தெரியா நின்னிடை,
கருவுறின் அப்போது கட்டாயம் தெரியும்
அன்றோ?" என்றான், அதைக்கேட்டுப் பொதுமகள்
நாணங் காட்டி நகைமுகங் காட்டி
அம்புப் பார்வையை அவன்மீது பாய்ச்சினாள்,
ஆரந் தாழ்ந்த அணிகிளர் மார்பும்
தாள்தோய் தடக்கையும், தறுகண் ஆண்மையும்
முற்றிய புகழும் முதிரா இளமையும்
பெற்றுத் தனித்திறன் பெற்று விளங்கிய