பக்கம் எண் :

சுரதாவின் தேன்மழை93

இரவல் வெற்றி!
பகைவன் தலையைக் பார்த்த மன்னவன்,
தோள்தட்டிக் கொண்டே தொடர்ந்து சிரித்தனன்!

ஒத்தாசை செய்த ஓவியப் பாவைக்குப் பத்தா
யிரம்பொன் பரிசாய் அனுப்பினான்!

வேல் பாய்ந்தது
தாசியின் சூழ்ச்சியால் தமையன் மாண்ட
செய்தியைக் கேட்ட சேர்ந்த ராயன்,
இடிந்தான்; உள்ளம் ஒடிந்தான்! "அந்தோ!
அண்ணா" என்றே அலறினான், அழுதான்:
ஓடினான், ஓடினான்: தேடினான் தாசியை;
சேர்ந்தவன் கரத்திற் சிக்கினாள் பரத்தை,
அத்தனை பேரும் அகப்பட்டுக் கொண்டனர்.

பிணாவூர்!
பிடிபட் டோர்தமைப் பிணைத்துக் கட்டியே
உருவிய வாளினால் ஓங்கி வெட்டினான்!
வென்ற வஞ்சகம் வீழ்ந்தது! வீழாது
நின்ற செங்கதிர் நெருப்பும் வீழ்ந்தது!
பிழைபுரிந் தோரைப் பிணைத்துக் கட்டி
இழுத்துச் சென்ற இடமென்ப தாலது
`பிணாவூர்` என்னம் பெயரைப் பெற்றது!