பக்கம் எண் :

சுரதாவின் தேன்மழை94

நெஞ்சில் நிறுத்துங்கள்!
அறிவிற் சிறந்தோ னாயினும் காந்தவன்
ஒழுக்கம் இழந்ததால் உயிரையே இழந்தான்!

ஆயிரம் புதுமைகள் அமைந்தநூ லாயினும்
அந்நூல் குறித்தொரு பாயிரம் அவசியம்,
அதுபோல் ஒழுக்கமும் மாந்தர்க் கவசியம்
பழுக்கும் பெருமை பெறவே
ஒழுக்கம் வேண்டும் உலகத் தீரே!