பக்கம் எண் :

சுரதாவின் தேன்மழை96

இருட்டுக்கு சேலை தந்தாள்
முல்லைக்கு முறுவல் தந்தாள்;
       முகிலுக்கு கூந்தல் தந்தாள்;
வில்லுக்குப் புருவம் தந்தாள்
      வேலுக்கு விழிகள் தந்தாள்;
சொல்லுக்கு செந்தேன் தந்தாள்
      சுனைதீர்க்கும் குளிர்ச்சி தந்தாள்;
அல்லிக்கு செவ்வாய் தந்தாள்;
       அழகுக்கே அழகு தந்தாள்:

நடைதந்தாள் அன்னத் திற்கு;
       நகைதந்தாள் எனக்கு, நன்னூல்
இடைதந்தாள் கொடிக்கு; நல்யாழ்
       இசைதந்தாள் எனக்கு, தக்க
விடைதந்தாள் பிறர்க்கு; மையல்
       விழிதந்தாள் எனக்கு,
மேலும் மடல்தந்தாள் படிப்ப தற்கு;
       மலர்தந்தாள் நுகர்வ தற்கு!

மிரட்டிக்கொண் டிருந்த காளை
       மாட்டினை விரைந்து நான்போய்
விரட்டிக்கொண்ட டிருந்தேன், வந்தாள்,
       விழிகளால் பிடித்தேன்; காதல்
திருட்டுக்குத் தேதி தந்தாள்;
       சேல்விழி பாதி தந்தாள்,
இருட்டுக்குச் சேலை தந்தாள்;
       இளமைக்கு வேலை தந்தாள்!