பக்கம் எண் :

 

திருவிழா

                     திருவி ழாவாம் திருவிழா!
                     தேரி ழுக்கும் திருவிழா!
                     ஒருமு கமாய் மக்களெல்லாம்
                     ஒன்று கூடும் திருவிழா.

                     பட்டு ஆடை உடுத்தலாம்;
                     பாட்டி கையைப் பிடிக்கலாம்;
                     கொட்டு மேளம் கேட்டதும்
                     ‘குடுகு’ டென்று ஓடலாம்.

                    
ஆனை, குதிரை பார்க்கலாம்;
                     அதிர் வேட்டுக் கேட்கலாம்.
                     சேனை போல யாவரும்
                     திரண்டு கூடிச் செல்லலாம்.

                     தேரில் சாமி வந்ததும்
                     தேங்கா யோடு போகலாம்.
                     ஊரா ரோடு நாமுமே
                     உடைத்து வைத்து வணங்கலாம்.

31