|             |                                          துவண்டனள் பூங்கொடி  |             |         
                  |             |                                 |             |         
                  |             |                               ஒருத்தியின் நல்லுடல் உருக்குலைந் திருந்தது;           சிரித்தசெவ் வாயிதழ் விளர்த்துக் கிடந்தது;           செந்தமிழ் பேசிச் சிவந்தஅவ் வாய்தான்           அந்தம் இழந்து நொந்து கிடந்தது; |             |         
                  |             |                               குழலோ யாழோ குரலோ என்னும் |           80 |         
                  |             |                               அழகிய இசைதரும் மிடறெழில் சிதைந்தது;           குழலின் காடு குலைந்து பறந்தது;           பிறையினைப் பழித்துப் பேசிய நுதலெழில்           குறைந்ததோ மறைந்ததோ கூறுவ தறிகிலேம்; |             |         
                  |             |                               குவளைக் கண்கள் கூர்மை யிழந்தன; |           85 |         
                  |             |                               தவழும் அருளொளி இருளில் தணிந்தது;           படர்ந்த பூங்கொடி பரிதியின் கொடுமை           தொடர்ந்து தாக்குறத் துவண்டது போல           மடந்தை உடலம் நுடங்கிக் கிடந்தது; |             |         
                  |             |         
                  |                      ஆள்வோர் ஆணை  |         
                  |             |                                 |             |         
                  |             |                               மருத்துவர் பலப்பல மருந்துகள் தந்தனர்; |           90 |         
                  |             |                               நெருப்பெனச் சுடுநோய் நெகிழ்ந்திட வில்லை;           ஒருநாள் இருநாள் ஓடி மறைந்தன;           மறுநாள் வெப்பம் சிறிதே தணிந்தது;           தணிந்து தணிந்து தண்ண்ணெனக் குளிர்ந்தது; |             |         
                  |             |                               முனிந்து சிறையுள் மூடிய அரசு |           95 |         
                  |             |                               கனிந்துளம் நெகிழ்ந்து கடுநோ யுற்ற           பூங்கொடி தன்னைப் பூட்டிய சிறையகம்           வாங்குக என்னை வழங்கிய தாணை; |             |         
                  |             |                                 |             |         
                  |             |                                          தமிழணங்கின் தோற்றம்  |             |         
                  |             |                                 |             |         
                  |             |                               அவ்விடை எவரோ ஆயிழை தன்பாற் |             |         
                  |             |                               செவ்விதிற் சிலசொல் செப்புதல் போலச் |           100 |         
                  |             |                               செவியிற் படலால் செந்தமிழ்ச் செல்வி           குவியிமை திறந்து கூர்ந்து நோக்கினள்;           காலிற் சிலம்பும் கையில் வளையும்           நூலிற் சிறிய நுண்ணிடை தன்னில் |             |         
                  |                      ---------------------------------------------------------------  |         
                  |   |                                         அந்தம் - அழகு, மிடறு - கழுத்து. |             |         
                  |   |             |             |