பக்கம் எண் :

மீரா கவிதைகள்.81

“கலையழகுச் சித்திரம்போல் கண்கவரும் உம்மைக்
கைப்பிடிக்கக் கடல் அளவு ஆசைதான் - ஆனால்
மலையாள மங்கைநான்! தமிழ்மகன் நீர்! இனிதாய்
மணம்புரிய வழியுண்டா நாம்?” என்று கேட்டாள்;
“சிலையே! நற் காதல்முன் சாதி இன பேதச்
சிந்தனைக்கே இடமில்லை; வா,” என்றேன். பின்னர்
அலையோடே அலையானோம்! அமுதுண்ணலானோம்!
ஆனந்தம்! ஆனந்தம்! ஆனந்தம் அங்கே!