பக்கம் எண் :

மீரா கவிதைகள்.87

மணல்வீடு கட்டிவிளை யாடிப் பாடி
மகிழ்ந்தயிளம் பருவமென்றால் புதுவெள் ளம்போல்
கணப்பொழுதில் ஓடோடி வந்தி ருப்பேன்!
கண்டிப்பாய் அருகிருபன்! களிப்பேன்! இன்றோ
மணமுடிக்கத் தக்கதொரு மங்கை யாக
மாறிவிட்டேன்; வளர்ந்துவிட்டேன்; அதனால் உங்கள்
தணற்பருவ ஆசைக்குத் தலைய சைத்தே
தாவிவர முடியவில்லை! துணிச்சல் இல்லை!

சந்தைக்குக் கரும்புவந்து குவியும் மாதம்
தம்பதிகள் ஆம் - மாதம்; இம்மா தத்தில்
சிந்தைக்குள் உலாச்செய்யும் நீங்கள் மஞ்சள்
திருத்தாலி கட்டியெனை அழைத்தி ருந்தால்
எந்தஇட மென்றாலும் - காடோ, மேடோ-
இந்நேரம் வந்திருப்பேன்; ஆமாம்! பெற்ற
தந்தைக்கு மகள்!அத்தான்! இன்னும் உங்கள்
தாரம்நான் ஆகவில்லை! என்ன செய்வேன்?

கவிஞர் இளங்கம்பன் நடத்திய
பாரத முழக்கம் இதழில் வெளிவந்தது.
1-3-63