குறும்புக்காரி இரவுமணி பத்திருக்கும்.... மேல்மா டத்தில் இருந்தேன்நான் தென்மதுரைத் தென்ற லோடு! பருவத்தில் இளவேனில் போன்ற என்றன் பன்னீர்ப்பெண் அருகிருந்தே அளிக்கும் காட்சி விருந்துக்குத் துடித்தனஎன் விழிகள்.... அந்த வேளையிலே, சோலையிலே மலர்ந்த பூப்போல் சிரித்தபடி ஒயிலாக வந்தாள்; வந்து சீனியிட்ட பால்தந்தாள்! தேமா தந்தாள்!
“ஆவின்பால் உடலுக்குத் தேவை; உன்றன் அன்புப்பால் என்னுயிர்க்குத் தேவை. சங்கப் பாவின்பால் அன்றுமனங் கொடுத்தேன்; உன்றன் பார்வையின்பால் இன்றுமனங் கொடுத்தேன். கண்ணே! பூவின்பால் வண்டுவந்து பொருந்திக் காணும் புதுஇன்பம் மதுஇனபம் தன்னை இன்று நாவின்பால் இதழின்பால் நயனத் தின்பால்
நான்காணத் தூங்காமல் ஏங்கு கின்றேன். |