அடிமைப் படுகுழியில் வீழ்ந்தோம் - வெறும் அரிசிப் புழுக்களெனத் தாழ்ந்தோம். கொடுமை கண்டுமனம் கொதித்தான் - கவி கொட்டி வீரியத்தை விதைத்தான். 8 ஊனைப் பெரியதெனக் கொண்டோம் - ஆன்ம உணர்வை விற்றுருசி கண்டோம். மானம் போகும்என்ற நிலைமை - தனை மாற்றும் பாரதியின் புலமை. 9 பண்டைச் சிறப்புகளைப் பாடிக் - கிழப் பாட்டிகள் கூட்டமெனக் கூடி அண்டிப் பதுங்கிவிட்ட நாட்டில் - நவ ஆர்வம் வளர்த்தவன் பாட்டே. 10 தீரன் அறிவுரையை இகழ்ந்து - வெறும் திவசம் நடத்திமட்டும் மகிழ்ந்து, பேரைக் கெடுத்துவிட மாட்டோம் - எனும் பிரதிக்ஞை பூண்டுவரம் கேட்போம். 11 கவிஞன் வாக்குறுதி பலிக்கும் - நம் கவலை தீர்ந்துநலம் ஜொலிக்கும் புவியில் கீர்த்தியுடன் வாழ்வோம் - வெகு புதுமை யாகஅர சாள்வோம். 12 வாழ்க பாரதியின் அருமை - அதில் வளர்க தாய்மொழியின் பெருமை. வாழ்க வையகத்தில் யாரும் - பிணி வறுமை அச்சமற்று வாழ்க. 13 குறிப்புரை:- கீர்த்தியுடன் - புகழுடன்; புவி - பூமி; பிரதிக்ஞை - உறுதி. 55. வல்லபாய் பட்டேல் இல்லாத காந்திமகான் இருந்தாற் போல எப்பொழுதும் காந்திவழி எடுத்துக் காட்டிக் கொல்லாத விரதமதே குறியாய்க் கொண்டு குற்றமற்ற சத்தியமே நெறியாய்க் கூடிக் |