122. நல்ல சமயம் பல்லவி நல்ல சமயமடா - இதை - நழுவவிடலாமோ! அநுபல்லவி நாட்டிற் சுதந்தரம் நாட்டி மனிதருள் தீட்டுத்தீண் டாமையும் தீர்ந்து விடுதற்கு (நல்ல) சரணங்கள் காந்தியைப் போல்தலைவர் - வந்தக் - காலத்திற்கிட்டுமடா? வாய்ந்த தருணமிதை - நீ - வழுவியிழப்பாயோ? சூழ்ந்திடும் துன்பங்கள் - வீழ்ந்திட நாமினி வாழ்ந்திட வும்மனச் சாந்தி யடையவும் (நல்ல)1 வேதம் ஒலிக்குதடா - காந்தி - ஓதும்மொழிகளிலே கீதை ஜொலிக்குதடா - அவர் - செய்யும் கிரியையெல்லாம் வேற்றுமை யில்லாமல் நாட்டின் நலத்தினைப் போற்றின யாரையும் - கூட்டி உழைத்திட (நல்ல)2 பண்டைய காலந்தொட்டு - நம்முள் - பாசம் பிடித்தபல வண்டை வழக்கங்களை - இனி - வாரியெறிந்துவிட்டு பத்தி வளர்த்தினிச் - சுத்த வழிகளில் நத்தி அனைவரும் - ஒத்துச் சுகித்திட. (நல்ல)3 123. சாந்தியே காந்தி பல்லவி சாந்தியின் விரிவுரை காந்தியின் சரித்திரம் தமிழா மறவாதே. அநுபல்லவி தேர்ந்தவர் ஞானமும் தெளிந்தவர் மோனமும் செந்தமிழ் நூல்களெல்லாம் சந்ததம் கோருகின்ற (சாந்தி) |