பட்டணத்து வீதிகளில் சுற்றியலைந்து - மிகப் பாடுபடும் கிராமத்துப் பத்தினிப் பெண்கள் இஷ்டமுடன் தம்குடிசை நிழலிருந்து - நூல் இழைத்துப் பிழைப்பதென்று ஆடுராட்டே! 3 கள்ளுபீர் சாராயம் காமவகைகள் - கெட்ட கஞ்சா அபின்க ளெல்லாம் ஓடியொளிக்க பிள்ளைகுட்டிப் பெண்ஜாதி வயிறார - உண்ணப் பெற்றதே சுதந்தரமென் றாடுராட்டே! 4 உழுது நெய்துபல தொழில்செய்து - பொருள் உதவும் வாணிபமும் முயல்வதல்லால் தொழுது பணிபுரியும் தொழில்களெல்லாம் - இனித் தோல்வி யடையுமென் றாடுராட்டே! 5 வம்பளந்து வீண்பொழுது போக்கமாட்டார் - பெண்கள் வாசலிலே கூட்டமிட்டுப் பேசமாட்டார் துன்பமில்லை சோம்பியவர் தூங்கமாட்டார் - குடி சுத்தப்படு மென்று சொல்லி ஆடுராட்டே! 6 ஜாதிஜனக் கட்டுகளை மதிக்காமல் - நித்தம் தானடித்த மூப்பாக வாழ்ந்ததெல்லாம் நீதிநெறி தெய்வவழி நினைத்தினிமேல் - சுகம் நிரம்பத் திரும்புமென்று ஆடுராட்டே! 7 ஆங்கிலம் படித்தோமென் றகங்கரித்துச் - சொந்தம் அக்கம்பக்கம் யாரெனிலும் மதியாமல் தாங்களே பெரியரென் றிருந்ததெல்லாம் - இனித் தலைகுனிந் தோடுமென்று ஆடுராட்டே! 8 சர்க்கார் மனிதரென்று மதிமயங்கிக் - குணம் தக்கா ரெனினும்அவ மதித்தவர்கள் சர்க்கார் ஜனங்களென்று மதிதெளிந்து - இனித தாழ உரைப்பரென்று ஆடுராட்டே! 9 |