படித்தோம் படித்தோமென்று பட்டங்காட்டி - ஏழைப் பாமரரை ஏய்த்து வாழ்ந்தவ ரெல்லாம் நடித்த நாடகங்கள் தவரென்பதைக் - கண்டு நல்வழி நடப்பரென்று ஆடுராட்டே! 10 அந்நியர்கள் நூல்கொடுத்தும் ஆடைகொடுத்தும் - நம் அங்கத்தை மூடுகின்ற பங்கமொழியும் கன்னியர்கள் நூற்கப்பல காளைகள் நெய்ய - நாம் காத்துக் கொள்வோம் மானமென்று ஆடுராட்டே! 11 125. சுக வாழ்வு சுதந்தரம் இல்லாமல் இருப்பேனோ? - வெறும் சோற்றுக் குயிர்சுமந்தே இறப்பேனோ? (சுத)1 விடுதலை யடையாமல் விடுவேனோ? - என்னை விற்றுடல் வளர்ப்பதில் கெடுவேனோ? (சுத)2 மானத்தைப் பெரிதென்று மதிப்பேனோ? - அன்றி மாற்றவர்க் குழைத்துடல் நசிப்பேனோ? (சுத)3 தொழுதுடல் சுகிப்பதைத் தொலைப்பேனோ? - இன்றித் தொழும்பனென் றேபெயர் நிலைப்பேனோ? (சுத)4 பயமின்றித் தருமத்திற் குழைப்பேனோ? - விட்டுப் பாவங்க ளுக்கொதுங்கிப் பிழைப்பேனோ? (சுத)5 ஞான சுதந்தரத்தை அடைவேனோ? - இந்த ஊனுக்கு ழைத்தடிமை தொடர்வேனோ? (சுத)6 126. கர்ப்பிணிகளை நடத்தும் முறை பல்லவி கர்ப்பிணிப் பெண்டுகளைக் கருணை யுடன்மிகவும் கவனிக்க வேண்டுவமே. |