202நாமக்கல் கவிஞர் பாடல்கள்

காமக் கடுங்குறும்பே! - நெற்றிக்
       கண்ணை யடைந்து விட்டேன்
தாமதம் செய்வாயேல் - வெந்து
       சாம்பல் கதியடைவாய்!       3

கோபக் கொடுங்குணமே! - உன்றன்
       கொட்டம் அடக்கிடுவேன்
தாபத்துக் கெட்டாத - தெய்வ
       சன்னதி என்னதுபார்!       4

சோம்பல்எனும் பிணியே! - உன்றன்
       சொந்தத்தை விட்டுவிட்டேன்.
தேம்பித் திரிபவரை - இனித்
       தேடிப் பிடித்துக் கொள்ளு.       5

அச்சம்எனும் பகையே! -இனி
       அண்டையில் நிற்பாயா?
பச்சைக் குழந்தையைப்போல் - மனப்
       பான்மை யடைந்துவிட்டேன்.       6

ஆசைமனக் குரங்கே - உன்றன்
       ஆட்சி ஒழிந்தது பார்?
காசு பணங்களெல்லாம் - வெறும்
       காகிதக் குப்பை கண்டேன்.       7

சூதுபொய் வஞ்சனைகாள்!- உங்கள்
       சூழ்ச்சி பலிக்காது!
நீதிமெய் நேர்மைகளே - கொண்ட
       நிச்சய ஞானமுற்றேன்.       8

வெற்றிஎனும் வெறியே! உன்னை
       வென்று விழுங்கிவிட்டேன்!
மற்றொரு யாரினிமேல் - என்
       மனத்தைக் கலைத்திடுவார்?       9