148. சொல்லின் பெருமை பேச்ச ழிந்து போனால் - அறிவின் பெருமை என்ன வாகும்? மூச்சி ழக்கு மானால் - தேகம் முன்னி ருந்த தாமே? கூச்ச மில்லை யென்றால் - பெண்மை குறைவு பட்ட தன்றோ? நீச்ச மற்ற மீன்போல் - சமூகம் நிலைகு லைந்து போகும்.1 சொன்ன சொல்ல ழிந்தால் - வாழ்க்கை சுகமி லாத தாகும். சின்ன ஏழைக் கேனும் - சொல்லே ஜீவ நாடி யாகும். மன்ன ரான பேரும் - பேச்சை மாறி மீறி விட்டால் சின்ன பின்ன மாவார் - அதிலே சிறிதும் ஐய மில்லை. 2 வாக்க ழிந்து விட்டால் - பின்னர் வாழ்வு தாழ்வ தாகும் மூக்க றுந்து போனால் - நல்ல முகவி லாச மெங்கே? நோக்கி லாது போனால் - கண்கள் நோகும் புண்க ளாகும் காக்க வேணும் சொல்லை - அதுவே கர்ம வீர மாகும். 3 வார்த்தை மாறி விட்டால் - மனிதன் வாசம் அற்ற மலரே. கீர்த்தி யென்ப தெல்லாம் - சொல்லில் கெட்ட பேருக் கேது? |