நாதி யற்றுப் போகுமிந்த நானி லத்தின் மீதிலே ஆதிநாள்நம் அன்னை செய்த அன்பை எண்ணும் போதிலே 2 அன்பு கொண்ட பேர்களுக்கே அச்ச மில்லை எங்கணும் முன்பு யாரும் கண்டிராத மூர்க்க ரோடும் தங்கலாம். துன்ப முற்ற மக்கள்யாரும் துணைவ ரென்று போற்றவே செம்பு கொண்ட தங்கமென்ன சேர்ந்த தீமை மாற்றுவார். 3 வெல்ல வந்த சேனைகூட வேகமற்ற தாகுமே சொல்லுமிந்த அன்பை மட்டும் சுத்த மாகப் பேணினால் கொல்லும் வேலும் வாளுங்கூடக் கூர்ம ழுங்கிப் போகுமே கல்லும் கூடப் புல்லைப்போலக் கனிவு கொண்டு காணுமே சொல்லுமிந்த அன்பை மட்டும் சுத்த மாகப் பேணினால். 4 கூழுமின்றிக் குடிசையின்றிக் கோடி கோடி உலகினில் ஏழை மக்கள் பரதவித்தே ஏங்க நேரும் கலகமும் கோழைப் பட்ட செல்வம் செய்யும் கொடுமை முற்றும் குறையுமே வாழி இந்த அன்புமட்டும் வைய மெங்கும் நிறையுமே. 5 |