வந்த தீமை தப்பி வாழ வழியைத் தேடி மாநிலம் சிந்தை நொந்து மனித வாழ்வு சீர்கு லைந்து போனதே. 4 உலகில் உள்ள மக்கள் யாரும் ஒருகு டும்ப மாகவே கலக மற்று யுத்த மென்ற கவலை விட்டுப் போகவே குலவி வாழ இந்த நாட்டின் கொள்கை யாகும் சாந்தியே சுலப மான மார்க்க மென்று சுத்த மாக ஏத்துவோம். 5 உயிரி ருக்கும் உடல னைத்தும் ஈசன் வாழும் உறையுளாம் அயர்வி லாத ஞான மூட்டும் அருளறிந்த அறிவுளோம் பெயர்ப டைத்த நமது நாட்டின் பெருமை யாகும் மந்திரம் துயர றுக்கும் ‘சாந்தி‘ சொல்லித் தொண்டு செய்ய முந்துவோம். 6 குறிப்புரை:-வெள்கி - அஞ்சி, கூசி. 159. புத்தாண்டு வாழ்த்துகள் புகுந்தது நமது வாழ்வில் புதியதோர் ஆண்டிந் நாளே பூசனை புரிந்து போற்றி ஈசனை வணங்கி நிற்போம். உகுந்திடும் தீமை யாவும் ஒழிந்திடும் துன்ப மெல்லாம் உயர்ந்திடும் நிலைமை; கீர்த்தி ஓங்கிடும்; காரி யத்தில் |