161. பொங்குக பால் பொங்கல் எனும்பொழுதில் - இன்பம் பொங்குது துன்பங்கள் மங்கி மறைந்திடும் மங்களச் சொல்அதிலோர் - தெய்வ மந்திரம் உண்டெனச் சிந்தை களித்திட எங்கள் தமிழ்நாட்டில் - மிக்க ஏழையும் செல்வரும் தோழமை எய்திடும் இங்கிதம் கண்டிடும்நாள்! - பலர் எங்கும் புகழ்ந்திட உங்கள் குடித்தனம் பொங்குக பொங்குக பால்! 1 வெள்ளை அடித்திடுவோம் - எங்கள் வீடுகள் வாசலில் கூடிய மாசுகள் அள்ளி எறிந்துவிட்டு - மிக அற்புதச் சிந்திரம் பற்பல வர்ணங்கள் புள்ளிகள் கோலமிட்டுத் - தெய்வ பூசனைத் தீபங்கள் வாசனைத் தூபங்கள் உள்ளத்தி லும்புகுந்தும் - அங்கே ஊறிய தீமைகள் மாறுதல் செய்திடும் சீருடைப் பொங்க லிதாம்! 2 மாடுகள் நாய்குதிரை - ஆடும் மக்களைப் போலவே ஒக்கும் உயிரென்று நாடும் நினைவுவந்து - பொங்கல் நாளில் அவைகளின் தாளில் தளையின்றித் தேடும் உரிமைதந்து - முற்றும் தேய்த்துக் குளிப்பாட்டி நேர்த்தி யுறமலர் சூடின தாகச்செய்வோம் - அதில் தோன்றும் கருணையை ஊன்றி நினைந்திட ஏன்றது இந்தப் பொங்கல்! 3 |