யுத்தமே என்னும் ஒருபெரும் பேச்சால் இத்தினம் எங்கும் யாவரும் ஏங்கிப் பித்தரே யாகிப் பேதுறும் நிலையைச் சற்றுநாம் மறக்கச் சாந்தியாம் பொங்கல்! 3 நினைவுகள் சிறந்து நிதிபல நிறைந்து சினவகை சேர்ந்த சிறுமைகள் தீர்ந்து மனைதொறும் மனைதொறும் மங்களம் தங்க அனைவரும் இன்புறும் அன்பே பொங்கல்! 4 ஏழையென்று எவரும் ஏங்குதல் நீங்கி மேழியின் சிறப்பில் செங்கோல் மின்னும் வாழ்வினைக் காட்ட வருவதே பொங்கல் வாழிய பொங்கல்! வாழிய உலகம். 5 170. கண்ணன் தந்த தீபாவளி தீபாவளிப்பெரிய திருநாள் - நாம் தெய்வப் பணிபுரிய வருநாள் பாபாதி தீவினைகள் ஒழியத் - திடம் பண்ணித் தொலைத்துதலை முழுகித் தூபாதி கற்பூரம் ஏற்றி - மலர் தூவித் தோத்திரங்கள் சாற்றி பாபாவி நரகனை வென்றோன் - கண்ணன் மலரடி யைத்தொழுது நின்றால். 1 கன்னங் கருநீலக் கண்ணன் - நாம் காட்சிக் கழகுமிகு வண்ணம் மின்னும் பல அணிகள் பூண்டு - புவி மெச்சும் கட்டழகில் நீண்டு சின்னஞ் சிறியவர்கள் உள்ளம் - அந்தச் சிங்காரம் கண்டுகளி கொள்ள முன்னம் நம்மிடத்தில் வருவான் - குறை முற்றும் நீக்கிநலம் தருவான். 2 |