174. காந்தி பிறந்த நாள் கத்திய வார்தன்னில் - காந்தி கதைதரும் போர்பந்தர் புத்திலி பாய் அன்னை - செய்த புண்ணிய மேஎன்ன உத்தமன் பிறந்ததினம் - அறிஞர் உவந்திடும் சிறந்ததினம் இத்தினம் மகிழ்வோடு - காந்தி எம்மான் புகழ்பாடு. 1 ஆர்வங் குன்றாமல் - காந்திய அறவழி நின்றோமேல் போர்ப்பயம் மறைந்துவிடும் - உலகில் புலைகொலை குறைந்துவிடும் பார்தனில் எல்லோரும் - மனிதப் பண்புள நல்லோராய்ச் சீர்பெற வாழ்ந்திடலாம் - தெய்வச் சிறப்புகள் வாழ்ந்திட லாம். 2 வேறு காந்தி மகானைப் பணிந்திடுவோம் காட்டிய அகிம்சை அணிந்திடுவோம் சாந்தியின் இன்பம் நிறைந்திடுவோம் சண்டைகள் மிகவும் குறைந்திருப்போம் மாந்தர் பிறப்பின் சிறப்படைவோம் மதவெறி இனவெளி அறப்பெறுவோம் தாழ்ந்தவர் யாரையும் தாங்கிடுவோம் தன்னலக் கொடுமைகள் நீங்கிடுவோம். 3 தன்னுயிர் இழந்திட நேர்ந்திடினும் தான்பிற உடலொடு சேர்ந்திருக்கும் |