254நாமக்கல் கவிஞர் பாடல்கள்

அம்மனம் சுவைத்த இன்ப
       ஆசையின் சபலம் தங்கும்;
மெய்மையன் பரமாத் மாவை
       மேவினால் அதுவும் நீ்ங்கும்.       6

குந்தியின் மகனே! கேளாய்;
       குறைவற முயலும் யோக
சிந்தனை யுடைய நல்ல
       தவசியின் திடத்தைக் கூட
இந்திரி யங்கள் வேகம்
       தம்முடன் இழுத்துச் செல்லும்;
நிந்தனை சேரப் புத்தி
       நிலைதடு மாற நேரும்       7

அப்படிப் பட்ட அந்தப்
       பொறிகளை அடக்கி வைத்துத்
தப்பற யோகம் தன்னில்
       தன்மனம் ஊன்றி நிற்பாய்.
எம்பொருள் எதையும் விட்டிங்
       கென்னையே பரனாய்க் கொண்டு
வெப்புறும் புலனை வென்றோன்
       மேவுவன் நிலைத்த ஞானம்.       8

மனிதர்கள் விஷயம் தம்மை
       மனத்தினில் மருவும் போது
பனிதரும் ஆசை தோன்றிப்
       பற்றுகள் பற்றிக் கொள்ளும்.
வினைதரும் பற்றுண் டாகி
       விளைத்திடும் மோகந்தானே.
சிவமெனும் தீமை தோன்றிச்
       சிந்தனை கெட்டுப் போகும்.       9