புலவர் சிவ. கன்னியப்பன் 261

பற்பல விதமாய்ப் பார்த்துப் பார்த்தே
அற்புத உண்மையை அறிந்தனன் தானும்
அறிந்தோ அன்றோ அன்னியர் தமக்கே
பரிந்தே நிற்கும் பாருமிவ் வாட்சியை
நல்லதே என்று நம்பின ராகி.       90

நல்லதோர் துரைகளும் நாட்டினர் பலரும்
மயங்கியே நிற்கும் மகிமையே மகிமை!
முயங்கியே அவர்கள் செய்திடும் முறையில்
ஆண்மையை இழந்திங் கழுந்திடும் தேசம்
பான்மையை உணரார் பாவமும் அறியார்.       95

ஆதலா லிந்த அரசியல் மாறத்
தீதிலா வழியில் திரும்பினேன் உழைக்க,
அரசியல் செலுத்தும் அதிகா ரிகளாம்
ஒருவ ரிடத்தும் நான் உள்ளம் கசந்திலன்
மன்னவ னிடத்துள மதிப்பிலும் குறையேன்.       100

என்னினும் இந்த இயல்பிலா முறைமை
இதுவரை கண்ட எல்லா முறையிலும்
இதுமிகக் கெடுதிகள் இழைத்துள தென்று
நம்பியே அதனுடன் நான்பிணக் குற்றென்
அன்பு காடுவதே அக்ரம மென்றேன்.       105

இந்தியா விற்கும் இங்கிலாந் திற்கும்
சந்ததம் நன்மையை நாடியே நானும்
ஒத்துழை யாமையே உயர்ந்த வழியென
ஒன்றிய சுகங்கள் உயர்ந்தஇந் நாட்டில்
மனை தொறும் இருந்து மானம் காத்ததாம்.       110

நினைவரி தாகிய ராட்டினத் தொழிலை
அழித்தனர் முற்றும் அறிந்தே யென்றிங்
கெழுதினார் தெரிந்த இங்கிலீஷ் காரரே.
காரண மிதமால் கணக்கிலா ஜனங்கள்
சோறுண வழியும் துணியுமில் லாமல்.       115