264நாமக்கல் கவிஞர் பாடல்கள்

சிவபிரான் துதி

ஆலமுண் டாலும் அசையா நான்பர
       கால னடிகுண சீலனடி
பாலை முனிந்த பணிமொழி யாள்பதி
       பாலகங் காதரன் பாடுங்கடி.       4

கோபாலன் துதி

தீதுசெய் வேந்தரைச் சீர்திருத் தம்செய்யத்
       தூதுந டத்திடும் தூயனடி
கோதில் கணத்தவன் கோகுலத் தில்வந்த
       கோபால கிருஷ்ணனைப் பாடுங்கடி.       5

வழிபடு கந்தன் துதி

கந்தம லரொரு மேலவர்க்கும் ஞானக்
       கைப்பலம் காட்டிய கந்தனடி
கந்தம ணக்கின்ற ஜோதிய டிபுகழ்
       காந்திய டிவெகு சாந்தனடி       6

தற்கால நிலைமை

கிட்டுங்க டிமலர் கொட்டுங்க டிகையைத்
       தட்டுங்கடி கண்ணீர் சொட்டுங்கடி
மட்டில் புகழ்கொண்ட இந்திய தேவியின்
       மாட்சிமை கெட்டதைக் கேளுங்கடி!       7

கெட்டோம டிகுடி கெட்டோம டிநாம்
       பட்டோம டிவெகு கஷ்டமடி
முட்டத் தரித்திரம் கிட்டி முறைக்குது
       மூதேவி நம்மை முறைமை கொண்டாள்.       8

கஞ்சியற் றோம்பழங் கந்தையற் றோம்குல
       வஞ்சிய ரேஎன்ன வஞ்சமடி
கெஞ்சுகின் றோம்மிக அஞ்சுகின் றோம்என்ன
       காலம டிவந்த கோலமடி.       9