புலவர் சிவ. கன்னியப்பன் 285

புத்திர வதியாரின் - மூன்றாம்
புத்திரரா கப்பிறந்தார் உத்தமர் காந்தி
அன்னையும் தந்தையுமே - நாம்
அறிந்த கடவுளென்று நடந்திடுவார்.
பள்ளிப் பருவத்திலும் - சிறு
பையன்களின் துடுக்குகள் செய்யமாட்டார்.
எவ்வளவும் பொய்பேசார் - மற்ற
எவரொடும் தவறுகள் எதுவும் செய்யார்.
ஆசான் மார்களுங்கூடக் - கண்டே
ஆச்சரியப் படும்படி நடந்து கொள்வார்.       15

பன்னிரண்டு வயதினிலே - கஸ்தூரி
பாய்என்னும் உத்தமியை மணமுடித்தார்.
தாயார் பெருங்குணமும் - கொண்ட
தாரந்தனக் கேற்றபடி வாய்ந்த நலமும்
ஓயாப் புகழுடனே - காந்தி
உலகினுக் குழைப்பதற் குதவியென்பார்.
பெண்ணின் பெருமையன்றோ - நாட்டின்
பெருமைகள் யாவினுக்கும் பிறப்பிடமாம்?
பத்தொன் பதுவயதில் சீமை
பாரிஸ்டர் பரிக்ஷைக்குப் போய்ப்படிக்க       20

ஆசைகொண் டார்காந்தி - கேட்ட
அறிந்தவர் பந்துமித்ரர் அனைவருமாய்ச்
சீமைக்குப் போனாலே - ஒழுக்கம்
சீர்கெட்டு நம்ஆசாரம் போய்விடுமென்று
தடுத்தார் பலபேர்கள் - பெற்ற
தாயாரும் சம்மதிக்கத் தயங்கிநின்றார்.
காந்தியின் பிடிவாதம் - கண்டு
கடைசியில் அன்னையொரு விதந்தேறி
"மூன்றுவிதச் சபதங்கள் - செய்து
மற்றுமவை காப்பேனென்று சத்தியஞ்செய்தால்       25