286நாமக்கல் கவிஞர் பாடல்கள்

தருவேன் விடை"யென்று - பெற்ற
தாயுரைத்த வாசகத்தைத் தலைவணங்கி
"அருள்வீர் என்னசபதம்" - என்றார்
அன்னையவள் தன்மகனை யணைந்துச்சொல்வாள்;
"மாமிசம் மதுவுண்ணல் - பர
மாதர்களைக் காமுறுதல் இவை மூன்றும்
செய்யேன் என்றெனக்கே - சத்தியம்
செய்தபின்னச் சீமைக்குச் செல்லுக" என்றாள்
"செய்வேன் அப்படியே - அந்தச்
சீமையிலே மட்டுமல்ல சென்மமுழுதும்       30

செய்வேன்" என்று சொல்லி - ஒரு
சிறந்த சமணசந் யாசியின் முன்னால்
சத்தியம் செய்து கொடுத்தார் - தாய்
சந்தோஷ மாகவிடை கொடுத்தனுப்பச்
சீமைக்குச் சென்றங்கே - தாய்க்குச்
செய்துவந்த சத்தியங்கள் பிசகாமல்
பாரிஸ்டர் பட்டம் பெற்றுத் - திரும்பப்
பம்பாய் நகரில்தொழில் செய்யும்போது
தென்னாப்பி ரிக்காவிலே - சில
தெரிந்த மகமதிய வியாபாரிகள்       35

வக்கீல் தொழிலாக - ஒரு
வழக்கை நடத்த அங்கு வரக்கேட்டார்.
போனார் காந்தியங்கே - முன்னால்
போயிருக்கும் இந்தியர்கள் படும்பாட்டைப்
பார்த்தார் பரிதவித்தார் - மீண்டும்
பம்பாய் திரும்பமனம் படியாமல்
இந்தியரின் உரிமைக்காக - அங்கே
இருபது வருஷங்கள் இருந்துழைத்தார்.
விண்ணப்பம் செய்துபார்த்தார் - லண்டனில்
வேண்டிய துரைகளைக் கெஞ்சிக் கேட்டார்.       40