கண்டபலன் ஒன்றுமின்றிக் - கடைசியில் தன்கையே தனக்குதவி என்றுதுணிந்தார். அநியாயச் சட்டங்களைச் - சிறிதும் அஞ்சாமல் சாந்தமுடன் எதிர்ப்பதென்றே இந்தியரை ஒன்று திரட்டிக் - கேட்க எல்லாரும் சரியென்றே ஒப்புக்கொள்ளவே தொடுத்தார் அறப்போரை - இந்தத் தொல்லுலகம் முன்னறிந்த தில்லையெனலாம். சாந்தமும் சந்தியமும் - நம்பும் சர்வேசன் கருணையும் படையாகக் 45காந்தியும் போர்தொ டுத்தார் - தாமே கைவிரற் பதிவுசெய்யும் சட்டமறுத்தார். தண்டனை யிரண்டுமாதம் - பெற்றுச் சந்தோஷ மாகச்சிறை முதலில்சென்றார். ஆயிரக் கணக்காக - இந்தியரும் அங்கிருந்த சீனர்களும் சிறைக்குவந்தார். இந்தவிதம் எட்டுவருடம் - அங்கே இடைவிடாம லேயுழைத்தார் இடர்பொறுத்தார். பலமுறை சிறைபுகுந்தார் - மக்கள் பத்தினியுங் கூடச்சிறைப் பயத்தைவிட்டார். 50 கல்லுடைத்துச் செக்கிழுத்தார் - சிறையின் கக்கூசில் மலஜலம் வாரியெடுத்தார். வீதியில் விலங்குடனே - சர்க்கார் வேண்டுமென்று நடத்தவும் சகித்திருந்தார். இத்தனை துயரும் சகித்தே - அங்கே இந்தியரின் கண்ணியத்தைக் காத்து வைத்தார். கைரேகைப் பதிவு செய்தல் - இந்தியரைக் கட்டாயக் கூலி செய்யக் கப்பலேற்றல் தலைவரி கொடுப்பதிலை - சர்க்கார் தள்ளிவிடச் சம்மதிக்க வெற்றியடைந்தார். 55 |