இந்தியா திரும்பி வந்தார் - சொந்த இந்நாட்டின் விடுதலைக் குழைத்திடவே சபர்மதி ஆசிரமத்தை - ஏற்படுத்தி சத்யாக்ர கப்பயிரை வளர்த்துவந்தார். சம்பரான் ஜில்லாவினிலே - அவுரிச் சாகுபடி கூலிகளைத் தாங்கி யுழைத்தார். கெய்ரா ஜில்லாவினிலே - விளைவு கெட்டவர்க்கு நிலவரி விட்டிடச் செய்தார். ஜெர்மன் சண்டைவரக் - காந்தி சேனையும்பண மும்மிகச் சேர்த்துக் கொடுத்தார். 60நன்றியை நினைப்பார்கள் - இந்த நாட்டுக்கொரு நல்லவழி பிறக்கு மென்றே நம்பியிருந் தார்காந்தி - ரௌலட் சட்டங்களால் இந்தியரை நசுக்க எண்ணம் கொண்டதைக் கண்டபின்னர் - இதுவரை கொண்டிருந்த நம்பிக்கை முற்றுந் துறந்தார். சாத்வீகப் போர்தொடுக்க - ஜனங்களைச் சத்திய மெடுத்துக்கொள்ளப் புத்தி புகன்றார். பற்பல இடங்களிலே - வெகு பரபரப் புடன்மக்கள் பதைத்தெழுந்தார். 65 நாடெங்கும் கூக்குரலும் - பஞ்சாப் நாட்டிற்சில பேர்புரிந்த பதற்றங்களும் ‘டய‘ரென் றொருபாவி - அன்று ஜலியன்வா லாவிற்சுட்ட சங்கதியும் ராணுவச் சட்ட அமலும் - இந்த நாட்டிற் பிறந்தவர்கள் மறப்பாரோ? கிலாபாத் விஷயத்திலும் - ஆங்கிலரால் கிடைத்திருந்த வாக்குறுதி தவறியதால் ஒத்துழைப் பினிமேலே - சிறிதும் உதவா தென்றுமனம் உறுதிகொண்டார். 70 |