புலவர் சிவ. கன்னியப்பன் 289

கல்கத்தா விற்கூடிய - விசேஷக்
காங்கிரசின் ஒத்துழையாத் தீர்மானம்
நாட்டுக்கொரு புத்துணர்ச்சி - தந்து
நல்லபல வேலைகளும் நடக்கையிலே
சௌரிசாரா வென்னுமிடத்தில் - வெறிகொண்ட
ஜனம்சிலர் போலீசுக் கச்சேரிக்குத்
தீயிட்டுக் கொளுத்தியதில் - உள்ளே
சிக்கிய இருபத்தொரு பேரும்மாண்டார்.
கேட்டார் இதைக் காந்தி - இயக்கம்
கெட்டுவிட்ட தென்றுகண்டு சட்டமறுப்பைத்       75

தாமே நிறுத்தி விட்டார் - அந்தத்
தகைமையை உலகுஎங்கும் புகழும் அன்றோ?
சிலநாள் சென்றதன்பின் - காந்தியைச்
சிறைபிடித்தார் குற்றப் பொறுப்பையெல்லாம்
தம்மேல் ஒப்புக்கொண்டே - அதற்குத்
தண்டனையா றுவருடம் கொண்டுசிறையில்
இரண்டு வருடமிருந்தார் - குடலில்
ஏற்பட்ட நோயினுக்குச் சிகிச்சைசெய்து
விடுதலை செய்தார்கள் - பிறகு
வெகுநாள் நிர்மாண வேலைகள் செய்தே       80

காங்கிரசைப் பலப்படுத்திக் குடிசைக்
கைராட்டைத் தொழில்எங்கும் பரவச் செய்தார்.
முகம்மது அலியின் வீட்டில் - இந்து
முஸ்லிம்களின் ஒற்றுமைக்குப் பட்டினிகொண்டார்.
ஆறுவருடம் பொறுத்தார் - நாட்டின்
அடிமைத் தனங்குறைய ஆள்வோர்க்கே
எண்ணமில்லை யென்று கண்டு - வைசிராய்
இர்வினுக்குத் தம்முடைய எண்ணமெழுதிச்
சத்தியப் போர்தொடுத்தார் - உப்புச்
சட்டத்தை மறுத்திடுவ(து) என்று ‘டாண்டி‘க்குப்       85

10 நா.க.பா. பூ.வெ. எ. 489