290நாமக்கல் கவிஞர் பாடல்கள்

புறப்பட் டார்காந்தி - அந்தப்
போதுஎழுந்த உணர்ச்சியை ஏதுசொல்லுவோம்!
ஆச்சரியம்! ஆச்சரியம்! - அதை
ஆராலும் முடியச் சொல்ல முடியாது.
டாண்டியில் சட்ட மறுத்தார் - ஒருநாள்
ஜாமத்தில் வந்து சர்க்கார் கைதுசெய்தார்.
நாட்டில்எந்த மூலை முடுக்கும் - சண்டை
நடந்ததில் லட்சம்பேர் சிறை புகுந்தார்.
சாத்வீகம் தவறாமல் - ஜனங்கள்
சந்தோஷ மாகப்பல ஹிம்சை சகித்தார்.       90

இந்தவிதம் பத்துமாதம் - சண்டை
இடைவிடா மல்எங்கும் நடந்திடவே
காந்தியை வெளியில் விட்டுச் - சர்க்கார்
காந்தி - இர்வின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
இரண்டாம் வட்டமேஜைக் - கூட்டத்(து)
இந்தியக் காங்கிரசின் பிரதிநிதியாய்
வீரமொழி கள்புகன்றார் - ஏழைகள்
விடுதலை விட்டுஎதுவும் வேண்டாம்என்றே
இந்தியா வருமுன்னால் - சர்க்கார்
இர்வின் உடன்படிக்கை மீறிவிட்டதால்.       95

வில்லிங்டன் வைசிராயைப் - பார்க்க
விடைவர வேணுமென்று சேதிவிடுத்தார்.
வைசிராய் மறுத்துவிட்டார் - வேறு
வழியின்றிக் காந்தியும் கைதியானார்.
சிறையில் இருக்கும்போதே - அங்கே
சீமையில் மந்திரி திட்டம் ஒன்றினால்
தாழ்த்தப்பட்ட இந்துக்களைத் - தேர்தல்
தனித்தனித் தொகுதியிற் பிரித்து வைத்தார்.
காதில் விழுந்த உடனே - காந்தி
கட்டாயம் பட்டினியிற் சாவேன் என்றார்.       100