எங்கும் பரபரப்பாய்ப் - பூனா எரவாடா ஒப்பந்தமும் நிறைவேறி, சிறையில் இருந்தபடியே - அரிஜன சேவை செய்ய வசதிகள் செய்துகொடுத்தார். சிலநாள் சென்றதன்பின் - இந்துக்கள் தீண்டாமை விஷயத்தில் மனமிரங்கத் தாம்ஒரு மூன்றுவாரம் - பட்டினித் தவஞ்செய்யக் கடவுளின் ஆணையெவரும் தடைசொல்லக் கூடாதென்றும் - காந்தி தாமெடுத்த விரதத்தைச் சார்க்கா ரஞ்சி 105விடுதலை செய்து விட்டார் - உடனே சட்டமறுப் பைச்சிறிது நிறுத்தச் சொல்லிப் பட்டினியை வென்று முடித்தார் - கிழவர் பயந்தவர் யாவரும் வியந்திடவே தலைவர்க ளோடுகலந்து - முடிந்தால் சண்டையை முடித்தேஒரு ராஜிசெய்யவே வைசிராய் வில்லிங்டனைத் - தாம் வந்துகாணச் சம்மதிக்கத் தந்திகொடுத்தார். பதில்தந்தி மறுத்திடவே - முதலில் பாடுபட்டுத் தாம்வளர்த்த பயிரான 110 சபர்மதி ஆச்சிரமத்தை - மூடித் தாமும்சில சீடர்களும் சிறைபுகுந்தார். சிறையினில் முன்போல - அரிஜன சேவைக்கு வசதி சர்க்கார் குறைத்ததனால் வசதிகள் அவைபோனால் - இனித்தாம் வாழ்வதன் லட்சியம் போனதென்றே பட்டினியிற் சாகத்துணிந்தார் - உலகம் பயந்து நடுநடு்ங்கிப் பரதவிக்கத் தெய்வச்செய லேபோல - காந்தியைத் திரும்பவும் சர்க்கார் விட்டுவிடவே 115 |