292நாமக்கல் கவிஞர் பாடல்கள்

செய்வதுதான் இன்னதென்று - தமக்குத்
தெளிய விளங்கவில்லை அதனாலே
‘கிச்சிக் கிச்சித் தம்பளம்‘ போல் - சர்க்கார்
பிடிக்கவும் விடுக்கவும் செய்ய நடத்தல்
கண்ணியக் குறைவென்று - தண்டனைக்
காலம் ஒருவருடம் கழியுமட்டும்
அரிஜன சேவை ஒன்றே - அதன்பின்
ஆண்டவன் விட்டவழி விடட்டும் என்றே
ஏழைகளுக்(கு) உழைப்பதற்கே - தவம்
ஏந்தும் காந்திபுகழ் என்றும் வாழ்கவே!       120

குறிப்புரை:- சரிதம் - வரலாறு; மலிந்திருக்கும் - மிகுதியாக இருக்கும்;
பூதலத்தில் -உலகில்; கனதையென்று - பெருமை என்று; உத்தமர் -
மேலானவர;் உத்தமி - பெண்பால்; ஆசாரம் - ஒழுக்கம்; வாசகத்தை -
சொல்லை; காமுறுதல் - விரும்புதல்; சீமை - அயல்நாடு; தன்கையே
தனக்குதவி - பிறர் உதவியை நாடாமல் தனக்கு வேண்டிய செயல்களைத்
தானே செய்து கொள்ளுதல்; சாந்தமுடன் - அமைதியுடன், சர்வேசன் -
எங்கும் நிறைந்த இறைவன்; இடர் - துன்பம்; சகித்து - பொறுத்து; சேவை
- தொண்டு; கண்ணியம் - மேன்மை.