நால்வர் உரைத்த தேவாரத்தில் இல்லை நந்தன் குலத்துக்கு நிந்தைசொலல்; பால்வரும் ஆழ்வார் பரசுரத்து இல்லை பாணர் வளர்ந்ததைக் கோணலெனல். 4சங்கரர் காசியில் அங்குஎன்ன சொன்னார்? சண்டாள பக்தனும் தங்குரு வென்றார்; எங்கள்ரா மானுஜர் நம்பலம் என்றே யாரையும் கொண்டுடன் கோயிலுட் சென்றார். 5 காட்டொருவேடனைத் தம்பியென்று எய்திக் கழுகினைத் தந்தையே னக்கடன் செய்து சேட்டைக் குரங்கையும் தன்னுடன் சேர்த்துச் சீதாபி ராமனும் செய்ததைப் பார்த்தோம். 6 கண்ணப்பன்எச்சிலை முக்கண்ணன் உண்டார்; கண்ணபி ரான்கடை நீரையுங் கொண்டார்; எண்ணிய பக்தருக்கு எளியது தெய்வம் என்பது வேநல்ல இந்துவின் தர்மம். 7 குறிப்புரை:-முக்கண்ணன் - மூன்று கண்களை உடைய சிவபெருமான்; பக்தருக்கு -அன்பர்க்கு, பாடல் 4இல் தேவாரம்மூவரால் எழுதப்பட்டது. எதுகை நோக்கி நால்வர் எனக்குறிக்கப்பட்டுள்ளது.) 187. ஓட்டடா ஓட்டடா!ஓட்டடா! நாட்டைவிட்டே ஓட்டடா தீட்டடா மனிதருக்குள் தீண்டல்என்ற தீமையே. 1
தொத்து நோய்கள் மெத்தவும் தொடர்ந்து விட்ட பேரையும் தொட்டுக் கிட்டிச் சொஸ்தமாக்கல் தர்மம் என்று சொல்லுவார். |