புலவர் சிவ. கன்னியப்பன் 299

சுத்தமேனும் ஜாதியால்
              தொடப்ப டாதிங்கு என்றிடில்
       தொத்து நோயைக் காட்டிலும்
              கொடியர் என்று சொல்வதோ?       2

நாய்குரங்கு பூனையை
              நத்தி முத்த மிடுகிறோம்
       நரகல் உண்ணும் பன்றியும்
              நம்மைத் தீண்ட ஒப்புவோம்;
ஆயும் நல்ல அறிவுடை
              ஆன்ம ஞான மனிதனை
       அருகி லேவ ரப்பொறாமை
              அறிவி லேபொருந்துமோ?       3

செடிமரங்கள் கொடிகளும்
              ஜீவர் என்ற உண்மையை
       ஜெகம றிந்து கொள்ளமுன்பு
              செய்தது இந்த நாடடா?
முடிவு அறிந்த உண்மை ஞானம்
              முற்றி நின்ற நாட்டிலே
       மூடரும் சிரிக்கும் இந்த
              முறையி லாவ ழக்கமேன்?       4

உயிரி ருக்கும் புழுவையும்
              ஈச னுக்காம் உறையுளாய்
       உணரு கின்ற உண்மைஞானம்
              உலகி னுக்கு ரைத்த நாம்
உயருகின்ற ஜீவருக்குள்
              நம்மொடு ஒத்த மனிதனை
       ஒத்திப் போகச் சொல்லுகின்ற(து)
              ஒத்துக் கொள்ள லாகுமோ?       5

அமல னாகி அங்குமிங்கும்
              எங்கு மான கடவுளை
       ஆல யத்துள் தெய்வமென்றே
              அங்கி ருந்தே எண்ணுவோம்;