ஆத்திசூடி நல்லறிவு அழித்து விட்டாய் ஆசாரக் கோவைதன்னை இழித்து விட்டாய் பார்த்திதனை அன்னியரும் பரிக சித்தார் பாவமிதைப் புண்ணியம்போல் மிகர சித்தாய். 4
தள்ளரிய தெய்வத்தின் நினைவு கூட்டும் பிள்ளையார் சுழிபோட்டுக் கடிதம் தீட்டும் தெள்ளறிஞர் நமதுமுன்னோர் செயலைக் கூட எள்ளிநகை யாடுகின்றாய் ஏழை நெஞ்சே! 5 |