32நாமக்கல் கவிஞர் பாடல்கள்

       சகல தேச மக்க ளோடும்
              சரச மாடி வருவது;
இலகும் எந்த வேற்று மைக்கும்
              ஈசன் ஒன்றே என்பதை
       இடைவி டாமல் காட்டும் எங்கள்
              இனிமை யான தமிழ்மொழி.       2

கொலைம றுக்கும் வீர தீரக்
              கொள்கை சொல்லும் பொன்மொழி!
       கொடியவர்க்கும் நன்மை செய்யக்
              கூறுகின்ற இன்மொழி;
அலைமிகுந்த வறுமை வந்தே
              அவதி யுற்ற நாளிலும்
       ஐய மிட்டே உண்ணு கின்ற
              அறிவு சொல்லும் தமிழ்மொழி;
கலைமி குந்த இன்ப வாழ்வின்
              களிமி குந்தபொழுதிலும்
       கருணை செய்தல் விட்டி டாத
              கல்வி நல்கும் மொழியிது;
நிலைத ளர்ந்து மதிம யங்க
              நேரு கின்ற போதெலாம்
       நீதி சொல்லி நல்லொ ழுக்கம்
              பாது காக்கும் தமிழ்மொழி.       3

அன்பு செய்தும் அருள் அறிந்தும்,
              ஆற்றல் பெற்ற அறமொழி;
       அறிவ றிந்து திறமை யுற்றே
              அமைதி மிக்க திருமொழி;
இன்ப மென்ற உலக றிந்த
              யாவு முள்ள கலைமொழி;
       இறைவ னோடு தொடர்ப றாமல்
              என்று முள்ள தென்றமிழ்.
துன்ப முற்ற யாவ ருக்கும்
              துணையி ருக்கும் தாயவள்;