354நாமக்கல் கவிஞர் பாடல்கள்

218. நம் சுதந்தரம்

சுதந்தரம் அடைந்தோம் என்ற
       சுகங்களை அடையு முன்னால்
எதிர்த்தன எதிர்பா ராத
       இடர்பல சகித்து வென்றோம்
முதிர்ந்துள யுத்த வேகம்
       முற்றிலும் மறைந்து போகும்
விதந்தனில் நமது நாட்டின்
       சுதந்தரம் உதவ வேண்டும்.       1

அரும்பெரும் காந்தி அண்ணல்
       அற்புத அறிவு சேர்ந்த
பெருந்திறல் காங்கி ரசுதன்
       பெருமையிற் குறைந்து போகக்
குறும்புகள் வளர்ந்தி டாத
       குறியுடன் கொள்கை காத்து
விரும்பிடும் ராம ராஜ்ய
       சுதந்தரம் விளங்க வேண்டும்.       2

அதிகார மோக மின்றி
       ஆதிக்க தாக மின்றிச்
சதிகார எண்ணம் சேராச்
       சமதர்ம உணர்ச்சி யோடு
துதிபாடி நாட்டை வாழ்த்தும்
       தொண்டர்கள் சூழ்ந்து நிற்கும்
நிதியாக காங்கிரஸ் நின்று
       சுதந்தரம் நிரக்க வேண்டும்.       3

காந்தியை மறந்தி டாமல்
       கருணையைத் துறந்தி டாமல்
சாந்தியிற் குறைந்தி டாமல்
       சத்தியம் இரிந்தி டாமல்