வீரரும் சேனையும் வேண்டியதே வெல்லவும் கொல்லவும் தூண்டிடவா! ஈரமும் இரக்கமும் கெடுத்தவரை இடித்துரைத்து அறவழி நடத்திடவே. 5 விஞ்ஞா னத்தால் கொல்லுவதை வீரர்கள் போரெனச் சொல்லுவதோ? அஞ்ஞா னத்தின் வடிவுஅன்றோ அணுகுண்டு ஆகிய வெடிகுண்டு? 6 கண்டுபி டித்தவர் நடுங்குகின்றார்? காணா தவர்கள் ஒடுங்குகிறார்! மண்டலத்து அறிஞர்கள் மயங்குகிறார் மறைத்திட முயற்சியில் தியங்குகிறார். 7 கொல்லும் வித்தைகள் பெருகுவதா! கொஞ்சிடும் வாழ்வுஇனி அருகுவதா! சொல்லும் வல்லவர் சொல்லுங்கள் சுதந்தரம் இதற்கா சொல்லுங்கள்? 8 இதுதான் தருணம் அடுத்துளது இம்சையின் தீமையை எடுத்துரைக்க. பொதுவாய் உலகினில் போர்வெறியை போக்கிடப் புகல்வோம் ஓர்நெறியை. 9 உத்தமன் காந்திசொல் கடைப்பிடித்தால் உண்மையில் போர்களைத் தடைப்படுத்தும் சத்தியம் சாந்தமும் வளராமல் சண்டையின் மோகமும் தளராது. 10 இந்திய மக்களின் பொதுச்சிறப்பாம் இம்சை வழிகளில் அதிவெறுப்பே; வந்தனை புரிவது வாய்மைகளை வணங்குதல் வாழ்க்கையின் தூய்மையரை. 11 |