நேரெதும் நில்லா ஊக்கமுடன் நிமிர்ந்திட அச்சம் போக்கிவிடும் பாரதி என்னும் பெரும்புலவன் பாடலும் தமிழன் தரும்புகழாம். 8 கலைகள் யாவினும் வல்லவனாம் கற்றவர் எவர்க்கும் நல்லனாம் நிலைகொள் பற்பல அடையாளம் நின்றன இன்னும் உடையோனாம். 9
சிற்பம் சித்திரம் சங்கீதம் சிறந்தவர் அவனினும் எங்கே சொல்? வெற்பின் கருங்கல் களிமண் போல் வேலைத் திறத்தால் ஒளிபண்ணும். 10 உழவும் தொழிலும் இசைபாடும் உண்மை; சரித்திரம் அசைபோடும்; இழவில் அழுந்திடும் பெண்கூட இசையோ டழுவது கண்கூடு. 11 யாழும் குழலும் நாதசுரம் யாவுள தண்ணுமை பேதமெலாம் வாழும் கருவிகள் வகைபலவும் வகுத்தது தமிழெனல் மிகையலவாம். 12
கொல்லா விரதம் பொய்யாமை கூடிய அறமே மெய்யாகும்; எல்லாப் புகழும் இவை நல்கும்; என்றே தமிழன் புவிசொல்லும். 13 மானம் பெரிதென உயிர்விடுவான்; மற்றவர்க் காகத் துயர்படுவான்; தானம் வாங்கிடக் கூசிடுவான்; ‘தருவது மேல்‘ எனப் பேசிடுவான். 14 |